Archive for the ‘ரோஜாவும் வண்ணத்துப்பூச்சியும்’ Category

ரோஜாவும் வண்ணத்துப்பூச்சியும்

e0aeb5e0aea3e0af8de0aea3e0aea4e0af8de0aea4e0af81e0aeaae0af8de0aeaae0af82e0ae9ae0af8de0ae9ae0aebf

ஒரு பழைய பாரசீகப் பாடல் இது:

அந்த புதிய ரோஜா
ஆழ்ந்த துயரத்தில் கிடந்தது.
அதன் கண்ணீர்த் துளிகள்
மண்ணில் சொட்டிக் கொண்டிருந்தன.
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சி கேட்டது,

“ரோஜாவே…
ஏன் அழுகிறாய்?
உன்னைப் புகழ்ந்து
அந்த கவிஞன்
பாடவில்லை என்பதனாலா..?”

ரோஜா சொன்னது,
“அதனாலல்ல;
அவனுடைய கவிதைகளின்
ஒரு வார்த்தையாக இல்லாமல்
போனேனே என்பதனால்.. ..”

அந்த கவிஞர் வேறு யாருமல்ல; கவிஞர் சாரண பாஸ்கரனாரே தான்!

ஏவி.எம்.நஸீமுத்தீன்
துபாய்
15.01.1977

(ஜனவரி 27,19977-ல் தென்றல் மன்றம் பதிப்பித்த கவிஞர் திலகம் ‘சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்’ என்ற நூலுக்கு வழங்கப்பட்ட அணிந்துரை)